இலங்கையின் அண்மைக்கால நிலைவரங்கள், ஆசிய - பசுபிக் பிராந்தியங்களில் அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவின் தாக்கத்தினால் சமூக மற்றும் தொழிலாளர்சார் சச்சரவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலையைப் புலப்படுத்துவதாக எஸ் அன்ட் பி குளோபல் மார்க்கெட் இன்ரெலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியிலுள்ள வணிக மற்றும் நிதித்தரவுகளை மதிப்பீடு செய்யும் நிறுவனமான எஸ் அன்ட் பி குளோபல் மார்க்கெட் இன்ரெலிஜென்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவருகின்றது.
இலங்கையைப்போன்ற பல நாடுகள் வலுவற்ற பொருளாதார அடிப்படைகள், மோசமான பொருளாதாரக்கொள்கைகள், கொரோனா வைரஸ் பரவல், ரஷ்யா - உக்ரேன் மோதல், அதிகரித்த எரிபொருள் விலை போன்ற வெளியகத்தாக்கங்கள், பணவீக்கம் போன்றின் விளைவாக அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றன என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி குறிப்பாக பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகள் இலங்கையை ஒத்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றன என்று எஸ் அன்ட் பி குளோபல் மார்க்கெட் இன்ரெலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM