அரசாங்கத்தில் ராஜபக்ஷாக்களின் மேலாதிக்கம் : மீண்டும் மக்கள் போராட்டங்கள் வெடிக்க வழிவகுக்கக்கூடும் - ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் எச்சரிக்கை

Published By: Vishnu

29 Jul, 2022 | 08:18 PM
image

(நா.தனுஜா)

போராட்டக்காரர்களால் கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகப் பதவிவகித்தார்.

தற்போது பாராளுமன்றமும் அரசாங்கமும் ராஜபக்ஷ குடும்பத்துடன் மிகநெருங்கிய தொடர்பைக்கொண்ட ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக்கூட்டணி அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

 இது தற்போதைய பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலோ அல்லது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் மக்களின் எதிர்ப்பிற்குரியவையாக இருந்தாலோ மீண்டும் ஆர்ப்பாட்டாங்கள் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலைக்கொண்டிருக்கின்றது என்று சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரித்திருக்கின்றது.

பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் கூட, இலங்கையானது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலை ஆகிய நெருக்கடிகளிலிருந்து மீள்வதில் இன்னுமும் அரசியல் ரீதியான அபாயத்திற்கு முகங்கொடுத்திருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

'புதிய ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு காணப்படுவதுடன் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சிலரும் அவரது அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருக்கின்றனர்.

இது நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனுறுதிப்பாடு ஆகியவற்றை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அவசியமான கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் போதுமான ஆதரவு இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறான மறுசீரமைப்புக்கள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் காணப்படக்கூடிய தடைகளை நீக்குவதற்கு உதவும் என்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு இலங்கை முறிவடைவதைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாகும்' என்று இலங்கை தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் வலுவான ஆதரவு காணப்படினும், அதற்கான பொதுமக்களின் ஆதரவென்பது மிகக்குறைவானதாகவே காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

'போராட்டக்காரர்களால் கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகப் பதவிவகித்தார். தற்போது பாராளுமன்றமும் அரசாங்கமும் ராஜபக்ஷ குடும்பத்துடன் மிகநெருங்கிய தொடர்பைக்கொண்ட ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக்கூட்டணி அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

இது தற்போதைய பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலோ அல்லது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் மக்களின் எதிர்ப்பிற்குரியவையாக இருந்தாலோ மீண்டும் ஆர்ப்பாட்டாங்கள் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலைக்கொண்டிருக்கின்றது' என்றும் ஃபிட்ச் ரேட்டிங் தரப்படுத்தல் நிறுவனம் கரிசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47