( எம்.எப்.எம்.பஸீர்)
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான 2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை 28 ஆம் திகதி தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர் முன்னாள் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இம்மனுவை தாக்கல்ச் செய்துள்ளார்.
அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் சட்டவிரோதமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழி சமைப்பதாக எடுத்துக்கூறியுள்ள முறைப்பாட்டாளர், கடந்த 22 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆயுதமேந்திய படையினர் செயற்பட்ட விதம் அதற்கான எடுத்துக்காட்டு எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசரகால நிலை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 9,11,12,13,14,15,17,18,20,21,26,34,36,37 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அவசர கால நிலை பிரகடன வர்த்தமானியானது, அரசியலமைப்பு ஊடாக உருதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான அரசியலமைப்பின் 10,11,12(1), 12(2), 13(1), 13 (2),13 (3), 13(4), 13(5),14 A, 14(1)அ, 14(1) ஆ, 14(1)ஈ, 14(1) எ, 14(1)ஏ ஆகிய உறுப்புரைகளை மீறுவதகாவௌய்ம் அத்துடன் அரசியலமைப்பின் 4 (ஊ), 111 இ உறுப்புரைகளுக்கு முரணாக அவை அமைந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால கட்டளைகள் அடங்கிய வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மனுவூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சட்டத்தினூடாக ஜனாதிபதி அல்லது ஜனாதிபதியால் அதிகாரமளிக்கப்ப்ட்ட அதிகாரியால் மேலதிக கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதை தடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் இலங்கை சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் இம்மனுவூடாக மேலும் கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM