உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
தற்போது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், துருக்கி, ஜேர்மனி, இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் 181 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
இதேபோல 107 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இந்திய மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்து வருகிறது.
தினசரி பாதிப்பில் சுமார் 11 சதவீதம் கேரளாவிலும், 10.5 சதவீதம் மகாராஷ்டிரத்திலும், 10.3 சதவீதம் தமிழ்நாட்டிலும் பதிவாகிறது. 6 மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. 7 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 500 முதல் 1,000 வரை உள்ளது.
இதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM