பிலிப்பைன்ஸில் அப்ரா மாகாணத்தில் இன்று புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Photo ; Cervantes LGU
இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
Photo ; Vigan Cathedral's Facebook page
இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 25 வயது இளைஞன் உயிரிழந்ததாக அப்ரா மாகாணத்தின் துணை ஆளுநர் ஜாய் பெர்னோஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 44 பேர் காயமடைந்துள்ளனர். 70 வீடுகள், 20 அரசு கட்டிடங்கள் மற்றும் மூன்று பாலங்கள் சேதமடைந்ததுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Photo ; by Bureau of Fire Protection
பிலிப்பைன்ஸில் 1990-ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM