சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published By: Priyatharshan

07 Nov, 2016 | 09:38 AM
image

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிப்பதால் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு நேற்று மாலை விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் மாத்தறை, தொட்டமுன, தெவிநுவர, வல்கம, பீக்வெல்ல மற்றும் பொல்ஹதுமோதர ஆகிய பிரதேசகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

பீக்வெல்ல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலை காரணமாக களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளன. நில்வளா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32