(எம்.மனோசித்ரா)
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வகையிலான இடைக்கால வரவு - செலவு திட்டம் ஆகஸ்ட் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது இடைக்கால வரவு - செலவு திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் , 'தற்போது அமைச்சுக்களுக்கான அத்தியாவசிய செலவீனங்கள் குறித்த மதிப்பீடுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் மீளாய்வு செய்து இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வெகுவிரைவில், ஆகஸ்ட் மாதத்திற்குள் இடைக்கால - வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.' என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே 9 கலவரங்களையடுத்து மே 12 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றதன் பின்னர் , 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
குறித்த விசேட உரையிலேயே அவர் ' இவ்வாண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே தீர்மானித்துள்ளதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.
குறித்த இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டினை மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு சுமார் இரு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருந்தது. இந்நிலையிலேயே நேற்றைய தினம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM