மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றில் போலி நாணய தாள்களுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டு பேரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மதுபானசாலை உரிமையாளர் மேலும் தெரியவருவதாவது,
“நீண்ட காலமாக எமது மதுபானசாலையில் போலி நாணய தாள்களை தந்து மதுபானத்தை கொள்வனவு செய்து தலைமறைவாவது வழமை. இவ்வாறு நாங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட போலி நாணய தாள்களை கிழித்து எறிந்துள்ளோம். அதன் பின்னர் இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருந்தோம்.
வழமைபோன்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முச்சக்கர வண்டியில் வந்த மூவரில் இரண்டு பேர் அதிலிருந்து இறங்கி வந்து 5 ஆயிரம் ரூபாய் பண நோட் ஒன்றைத் தந்து மதுபானம் கேட்டனர். அந்த பண நோட் போலியானது என்ற சந்தேகம் எமக்கு வலுக்கவே அதனைப் பரிசோதித்தோம். அது போலி உறுதியாகியது. நாம் பரிசோதிப்பதை அவதானித்த அந்த மோசடிக் காரர்கள் இருவரும் தப்பி ஓட எத்தனித்தனர். அவர்களை நாம் சாதுரியமாக மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். முச்சக்கரவண்டியில் இருந்த மூன்றாவது நபர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிக்கப்பட்ட இருவரும் காத்தான்குடியைச் சோர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவர்கள். மோசடிக்கார சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM