மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீட்டை உடைத்து அங்கிருந்து 8 கால் பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 5 பேரை இன்று திங்கட்கிழமை (25) கைது செய்துள்ளதுடன் இதில் கைது செய்யப்பட்ட இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிடமிருந்து ஹரோயின் போதை பொருள் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஆர்.சி. வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான கடந்த 11 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று அன்று அரவு 9.15 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பகுதி கதவை உடைத்து அங்கு வீட்டின் அறையில் அலுமாரியில் இருந்த 8 கால் பலுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக பொலிசாரிடம் முறைபாடு வழங்கியதையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இன்று திங்கட்கிழமை (25) மிச்சு நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20,45 வயதுடைய பெண்கள் இருவரும் ஆண்கள் மூவர்; உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட ஒரு பெண் மற்றும் 2 ஆண்களிடம் இருந்து ஹரோயின் போதை பொருளை மீட்டதுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை அவர்களிடமிருந்து மீட்டதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 3அரை பவுண் தங்க சங்கிலியை மட்டக்களப்பு நகரில் நகைகடை ஒன்றில் அடகு வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதையடுத்து கொள்ளையிடப்பட்ட 8 கால் பவுண் தங்கநகைகளை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM