உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.
இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது.
அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன.
அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா உறுதியளித்திருந்தது.
ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின.
துறைமுகத்தின் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.
எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உக்ரைன் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.
இந்த நிலையில் ஒடேசா துறைமுகத்தில் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
அதுமட்டும் இன்றி ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக ரஷ்யா ராணுவம் கூறியது. எனினும் இது குறித்து உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனிடையே ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என சாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக கூறினார்.
அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM