தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர அந்தஸ்த்திற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'எண்ணித் துணிக' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் எஸ். கே. வெற்றி செல்வம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'எண்ணித் துணிக'. இதில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், வித்யா பிரதீப், வம்சி கிருஷ்ணா, சுனில் குமார் ரெட்டி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜே. பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிரிக்கெஸ் சினி கிரியேசன்ஸ் மற்றும் ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதரன் மரியதாசன் மற்றும் சுரேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' எனும் திரைப்படத்திற்காக மூன்று தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் வசந்த் சாய் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எண்ணி துணிக எனத் தொடங்கும் திருக்குறளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் முற்றிலும் வித்தியாசமான எக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு நடிகர் ஜெய் எந்தவித கால தாமதமுமின்றி வருகை தந்து அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
தயாரிப்பாளர்கள் இருவரும் இந்தப் படத்திற்கு 'எண்ணித் துணிக' எனும் தலைப்புக்கு ஏற்ற வகையில் பல தடைகளை கடந்து, பொறுமை காத்து, படைப்பை நிறைவு செய்து, ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM