ஸ்பெய்னில் 34,000 ஏக்கர் பரப்பளவு காடு தீக்கிரையானமைக்கு தனது ஒப்பந்தகாரர் நிறுவனமொன்றே காரணம் என நெதர்லாந்திலுள்ள சர்வதேச நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
லேண்ட் லைப் எனும் இந்நிறுவனம், காடுகளை மீள ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெதர்லாந்தை தளமாகக் கொண்டுள்ளதுடன் அமெரிக்கா, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் அலுவலகங்களை கொண்டுள்ள நிறுவனம் இது.
இந்நிலையில், ஸ்பெய்னின் அராகோன் பிராந்தியத்தில் 34,600 ஏக்கர் (14,000 ஹெக்டேயர் பரப்பளவான காடு தீக்கிரையானமைக்கு தனது ஒப்பந்த நிறுவனமொன்று காரணம் என லேண்ட் லைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழைக்காலத்தில் மரங்களை நடுவதற்கான தயார்படுத்தல்களுக்காக தனது ஒப்பந்த நிறுவனமொன்றினால் பயன்படுத்தப்பட்ட அகழ்வு இயந்திரமொன்றிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியே இக்காட்டுத் தீ பரவியதாகவும் லேண்ட் லைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பரவிய இத்தீ வியாழக்கிழமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் 34,600 ஏக்கர் காடு தீக்கிரையானதுடன் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து 17,000 பேர் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்படி தீப்பரவல் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்ட மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் லேண்ட் லைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீப்பரவல் குறித்து அவசர சேவைப் பிரிவுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது என அந்நிறுவுனம் தெரிவித்ததுடன், இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமானது அப்பகுதியில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஸ்பானிய நிறுவனம் எனவும், உள்ளூர் மற்றும் பிராந்திய அதிகாரிகளின் அனுமதிப்பத்திரங்களையும் கொண்டுள்ளது எனவும் லேண்ட் லைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த மாதம் அப்பிராந்தியத்தில் 20 ஏக்கர் பரப்பளவான காடு அழிக்கப்படுவதற்கு காரணமான தீயை இந்நிறுவனம் ஏற்படுத்தியிருந்ததாக ஸ்பானிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏற்கெனவே ஒரு சம்பவம் நடந்த பின்னரும் அந்நிறுவனம் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்தமை சரியானதல்ல என ஸ்பெய்னின் புபேய்ர்கா நகர மேயர் கூறியுள்ளார்.
ஸ்பெய்னில் கடும் வெப்பநிலைக்கு மத்தியல் இவ்வருடம் ஏற்பட்ட பல காட்டுத் தீ பரவல்களினால் சுமார் 2 லட்சம் ஹெக்டேயர் பரப்பளவான காடு தீக்கிரையாகியுளள்து.
கடந்த வாரத்தில் மாத்திரம் 80,000 ஹெக்டேயர் காடு தீக்கிரையாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM