அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது யுவதியொருவர், இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகய்லா யப்லோன்ஸ்கி எனும் இந்த யுவதி, அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். உள்ளூரில் குதிரைப் பயிற்றுவிப்பாளராக பிரபலமானவர் இவர்.
இவர்கள் 17 வயதான இரு சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இப்பெண்ணை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளிக்கையில், தானும் மெகய்லாவும் சிறந்த நண்பிகளாக விளங்கியதாக தெரிவித்துள்ளார்.
தனது மகனுக்கும் மெகய்லாவுக்கும் இடையிலான உறவு குறித்து தான் கேள்வி எழுப்பிய போதிலும், அது நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என மெகய்லா பதிலளித்தார் எனவும் அச்சிறுவனின் தாய் நீதிமன்றில் தெரிவித்தார்.
6 குதிரைகளை மெகய்லா யப்லோன்ஸ்கி பராமரித்து வருவதாகவும் அவரை பிணையில் விடுவிக்காவிட்டால், அக்குதிரைகளை கவனிப்பதற்கு எவரும் இல்லை எனவும் மெகெய்லாவின் சட்டத்தரணி கூறினார்.
மெகய்லாவை 25,000 டொலர் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஜூலை 29 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM