அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பூங்காவில், ஓக் மரங்களில் சமீபத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
அந்த தீ, 48 சதுர கிலோ மீற்றர் துாரத்துக்கு பரவி, நேற்று முன்தினம் மிகப்பெரிய காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போது வரை, அதை அணைக்க முடியவில்லை.
இதில், அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் எரிந்து சாம்பலாகியள்ளன. 6,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதையடுத்து, அந்த மாகாண கவர்னர் கவின் நியூசோம் அவசர நிலையை அறிவித்துள்ளார். இது குறித்து, அமெரிக்க வனத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் பேட்டர்சன் கூறியதாவது,
இந்த ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துகளில், இது மிக முக்கியமானது.
400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள், விமானங்களில் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM