தேயிலை பயிர்ச்செய்கைக்கு 15 ஆயிரம் மெற்றிக்தொன் உரத்தை விநியோகிக்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 4

24 Jul, 2022 | 07:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 40,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும் - அமைச்சர் மஹிந்த  அமரவீர | Virakesari.lk

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உர விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள 65,000 மெற்றிக்தொன் உரத்தில் முதற்கட்டமாக 40,000 மெற்றிக்தொன் உரம் கிடைக்கப்பெற்றுள்ளது.பெரும்போக விவசாயத்தை இலக்காகக் கொண்டு தற்போது உர விநியோகம் 60 சதவீதமளவிற்கு முழுமையடைந்துள்ளது.

மரகறி உற்பத்திக்கு தேவையான கலப்பு உரம் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் இரு வாரகாலத்திற்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்.இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52