நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு நியமனம்

Published By: Digital Desk 3

23 Jul, 2022 | 01:57 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

அதற்கமைய இது தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய அங்கத்தவர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க , ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான எஸ்.எம்.ஜீ.கே. பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விசாரணை அறிக்கையை இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விசாரணைகள் நிறைவடையும் வரை நிமல் சிறிபால டி சில்வா கடந்த அரசாங்கத்தில் வகித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த அமைச்சு பதவி வெற்றிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06