தென் ஆபிரிக்காவின் மதுபான விடுதியான்றில் உயிரிழந்து காணப்பட்ட 21 சிறுவர்களின் இரத்தத்தில் மர்மமான இரசாயனப் பொருள் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆபிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கிழக்கு லண்டன் நகரிலுள்ள மதுபான விடுதியொன்றில் கடந்த 26 ஆம் திகதி 21 சிறுவர்கள் மர்மமாக உயிரிழந்து காணப்பட்டனர். இவர்கள் 13 முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்களாவர்.
இம்மாணவர்களின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனநெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. எனினும், சனநெரிசல் எதுவும் ஏற்படவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. அவர்களின் உடல்களில் காயம் எதுவும் காணப்படவில்லை.
ஒன்றாகக் கூடி உரையாடிக் கொண்டிருந்த நிலையில் அல்லது நடனமாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்தவர்களைப் போன்று அவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தென் ஆபிரிக்காவில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மதுபான விடுதி, சிறுவர்களுக்கு மது விநியோகித்து வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மேற்படி பாடசாலை பரீட்சை நிறைவைக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மேற்படி மாணவர்கள் குறித்த மதுபான விடுதியில் விருந்தொன்றுக்காக சென்றிருந்தனர் எனக் கூறப்பட்டது.
இம்மாணவர்களின் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அதிகரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி மாணவர்கள் 21 பேரினதும் இரத்தத்தில் மெதனோல் எனும் இரசாயனப் பொருள் காணப்பட்டதாக ஈஸ்டர்ட் கேப் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளரான வைத்தியர் லிதா மதிவானே கூறியுள்ளார். எனினும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாக மேற்படி மெதனோல் அளவு இருந்ததா என்பதை அறிவதற்கு ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இம்மாணவர்களின் இரத்தத்தில் எவ்வாறு மெதனோல் சேர்ந்தது என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM