இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் அணி பங்குகொள்ளும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலை நகரான ஹராரேவின் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டியை ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின் 7.3 ஓவர்கள் மாத்திரமே எஞ்சிய நிலையில் அவ்வணியின் சகல விக்கெட்டுகளையும் கைப்பற்றி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியது. இப்போட்டி ரங்கன ஹேரத் தலைமை வகித்த முதலாவது போட்டியாகவும் அமைந்தது. இதனால் சிம்பாப்வே அணிக்கெதிராக இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்கப்படுகிறது. துடுப்பாட்டத்தில் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.
உப்புல் தரங்க 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அணியில் அவருக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. எனினும், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இணைக்கப்பட்ட அவர் , இப்போட்டியில் சதம் விளாசியமை அவரது இரண்டாவது சதமாக அமைந்தது. இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 10 வருடங்களுக்கு பின்னர் அவரால் அடிக்கப்பட்ட சதமாகும்.
குசல் பெரேரா தனது அதிரடித் துடுப்பாட்டத்தை டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து வருகின்றமை இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு பலமாகும். மேலும், துடுப்பாட்டத்தில் பெரிதும் எதிர்பார்த்த குசல் மெண்டிஸ் பிரகாசிக்க தவறியிருந்தார்.
பந்துவீச்சில் சுரங்க லக்மால், அறிமுக வீரர் லஹிரு குமார ஆகியோரின் ஆற்றல் வெளிப்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக அமைந்தன. முதல் போட்டியில் ஆடுகளம் ரங்கன ஹேரத்திற்கு சாதகத் தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. எனினும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராக இவரே காணப்படுகிறார். மற்றொரு சுழற் பந்து வீச்சாளரான தில்ருவன் பெரேராவும் தன்பங்கிற்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிம்பாப்வே அணியைப் பொறுத்தமட்டில் இலங்கை அணிக்கு சவால் அளிக்கும் வீரராக அவ்வணியின் தலைவரான கரேம் கிறீமர் விளங்குகிறார். இவர் அப்போட்டியில் ஒரு சதம் உட்பட 145 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சகல துறைகளிலும் பிரகாசித்து வருகிறார். அதேபோல் அறிமுக பந்துவீச்சாளரான கார்ல் மும்பாவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் இன்றைய போட்டியிலும் முதலாவது போட்டியில் விளையாடிய அதே அணியே களமிறங்குவதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது. இப்போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றால் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்றுக்கொள்ளும்.
டெஸ்ட் தொடரை அடுத்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் பங்குகொள்ளும் முத்தரப்பு சர்வதேச ஒரு நாள் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM