செல்பீ யால் வந்த வினை !

Published By: Vishnu

19 Jul, 2022 | 11:45 AM
image

இத்­தா­லி­யி­லுள்ள எரி­ம­லை­யொன்றின் உச்­சியில் செல்பீ எடுக்க முயன்ற அமெ­ரிக்க உல்­லாசப் பய­ணி­யொ­ருவர், எரி­மலைக் குழிக்குள் தவறி வீழ்ந்­ததால் காய­ம­டைந்­துள்ளார்.

23 வய­தான மேற்­படி இளைஞர் தனது குடும்­பத்­தி­ன­ருடன் இத்­தா­லிக்கு சுற்­றுலா சென்­றி­ருந்­த­போது, இத்­தா­லியின் பிரச்­சித்தி பெற்ற வசூ­வியஸ் எரி­ம­லை­யையும் பார்­வை­யிடச் சென்றார்.

4,000 அடி உய­ர­மான இந்த எரி­ம­லையின் உச்­சிக்கு ஏறி­யதும், செல்பீ படம் பிடித்­துக்­கொள்ள மேற்­படி இளைஞர் முற்­பட்டார்.

இதன்­போது, அந்த இளை­ஞரின் தொலை­பேசி கையி­லி­ருந்து நழுவி எரி­மலைக் குழியின் விளிம்பில் வீழ்ந்­தது. 

அப்­போது, தொலை­பே­சியை எடுப்­ப­தற்­காக கீழி­றிங்­கிய இளைஞர், நிலை தடு­மாறி அவர் பல அடி தூரம் எரி­மலை குழிக்குள் வீழ்ந்தார் என இத்­தா­லிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

எரி­மலைக் குழிக்குள் இளைஞர் வீழ்ந்­ததைக் கண்ட உள்ளூர் சுற்­றுலா வழி­காட்­டிகள் உத­விக்கு விரைந்­தனர். 

பின்னர் பொலி­ஸாரும் அங்கு வந்­த­துடன், ஹெலி­கொப்டர் ஒன்றை பயன்­படுத்தி மீட்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டனர்.

இதே­வேளை, மேற்­படி குடும்­பத்­தினர் தடை­செய்­யப்­பட்ட பகு­தி­யொன்­றுக்கு ஊடாக எரி­மலை உச்­சியை அடைந்­துள்­ளனர் என இத்­தா­லிய சுற்­று­லாத்­துறை அதி­காரி ஒருவர்  தெரி­வித்துள்ளார்.

மிக ஆபத்­தா­னது என்­பதால் தடை­செய்­யப்­பட்­டுள்ள பகு­திக்குள் பிர­வே­சித்­தார்கள் என இக்­கு­டு­மப்­பத்­தினர் மீது குற்றம் சுமத்­தப்ட்­டுள்­ள­தாக இத்­தா­லிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right