அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மீளப்பெற வேண்டும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

Published By: Digital Desk 4

18 Jul, 2022 | 10:08 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் தற்போதைய நிலைவரத்திற்கு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதென்பது ஒருபோதும் தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Articles Tagged Under: சட்டத்தரணிகள் சங்கம் | Virakesari.lk

நாட்டில் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக மீளப்பெறப்படுவதுடன் மக்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால அரசாங்கத்திற்குரிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதில் ஜனாதிபதியினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தும்போது அதன்மூலம் அவசரகால வழிகாட்டல்களை வெளியிடுகின்ற, அரசியலமைப்பின் சரத்துக்கள் தவிர்ந்த எந்தவொரு சட்டத்திலும் உள்ள சரத்துக்களை நீக்குகின்ற அல்லது திருத்துகின்ற அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றது.

குறிப்பாக அவசரகால வழிகாட்டல்களின் ஊடாக நீதிமன்றப்பொறிமுறைக்கு அப்பால் நபரொருவரைத் தடுத்துவைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அவசரகால வழிகாட்டல்களின் மூலம் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையான மனித உரிமை மீற்ல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

எனவே பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பை நடத்தவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுகுறித்துக் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் சட்டரீதியான உரிமையை அடக்குவதற்கோ அல்லது குறித்தவொரு வேட்பாளர் தொடர்பில் விருப்பு, வெறுப்பை வெளியிடுவதற்கான வாய்ப்பை முடக்குவதற்கோ அவசரகாலச்சட்ட வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று நாம் கருதுகின்றோம்.

போராட்டங்களில் ஈடுபடுதல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளின் பிரதானமானதாகும்.

ஆகவே அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும் முடக்குவதற்கு அவசரகால வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதுடன் அது தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடாது.

நாட்டின் தற்போதைய நிலைவரத்திற்கு அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதென்பது ஒருபோதும் தீர்வாக அமையாது என்று நாம் நம்புகின்றோம்.

எனவே அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு உடனடியாக மீளப்பெறுவதுடன் மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31