லுத்தீப் பாரூக்
வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ.
மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை கொண்ட சமையல் கலைக்கும் பேர்போன நாடு. இங்கு 99சதவீதமான மக்கள் முஸ்லிம்கள். எஞ்சிய ஒரு சதவீத மக்கள் கிறிஸ்தவர்கள்.
ஒரு காலத்தில் பிரான்ஸின் காலணித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த மொரோக்காவில் தற்போது வரையில் நியமிக்கப்பட்ட அரச பரம்பரை தான் ஆட்சியில் உள்ளது. மொரோக்கோவின் மன்னர் அந்த மாளிகையிலேயே பிறந்து வளர்ந்தவர்.
சாதாரண பொது மக்களோடு எந்தத் தொடர்பும் அற்றவர். ஆட்சி அதிகாரத்தின் மீது பூரண கட்டுப்பாடு கொண்டிருந்தவர். ஆனால் இந்த அடக்குமுறை ஆட்சியின் கீழ் சிக்குண்ட மக்கள் வறுமை மற்றும் கல்வி அறிவின்மை என்பனவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொரோக்கோவின் சிறிய மீனவ நகரங்களில் ஒன்றில் மீனவர் ஒருவர் மோசமான முறையில் கொல்லப்பட்டதை அடுத்து 2016இல் தேசிய மட்டத்தில் கலவரங்கள் தலைதூக்கின. இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தப் போராட்டம் விரிவடைந்து அரசியல் ரீதியான மோசடிகள், நிதி ரீதியான ஊழல்கள் என்று பல்வேறு விடயங்கள் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றின் நடுவே 2011இல் ஏற்பட்ட அரபு வசந்த எழுச்சியின் தாக்கமும் மொரோக்கோவில் கிளைவிடத் தொடங்கியது. உண்மையில் இந்தப் போராட்டங்கள் என்பது பொருளாதார ரீதியான புறக்கணிப்பு, சமூக மற்றும் சலாசார உரிமைகளின் மறுப்பு என்பனவற்றின் விளைவாக பல தசாப்தங்களாக இந்தப் பிராந்தியத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்திய ஒரு நீண்ட கால நெருக்கடியாகும் என்று அரசியல் ஆய்வாளர் அரஸ்கி தாவூத் கூறுகின்றார்.
ஊழல் முதல் வேலையில்லாப் பிரச்சினையின் பின்னடைவு வரை எல்லாவிதமான சமூக நோய்களும் துஷ்பிரயோகங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையாளப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த எதிர்க்கருத்துக்களில் அவதானமாகக் கவனம் செலுத்திய மொரோக்கோ அதிகாரிகள் அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்கவும் செய்தனர்.
மொரோக்கோவில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற பிராந்தியம் வெளிப்படையாக மிகவும் இhhணுவ மயமாக்கப்பட்ட ஒரு பிhந்தியம். ஏனைய பிராந்தியங்களுக்கு காலவரங்கள் பரவி விடாமல் தடுப்பதில் மொரோக்கோ அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செயற்பட்டதோடு இந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தாவுத் மேலும் விவரித்துள்ளார்.
அண்மையில் பத்தி எழுத்தாளர் அஸிஸ் சாபிர் எழுதி உள்ள ஒரு ஆக்கத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தீக்கு சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் எரிபொருளாக அமைந்துள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்கள் நாளுக்கு நாள் பல்கிப் பெருகும் ஒன்றாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரச குடும்பத்தின் நிதி நெருக்கடிப் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே சென்றது. பண்டோரா பத்திரங்களிலும் அவை அண்மையில் பிரதி பலித்தன. யதார்த்த நிலையோடு முற்றிலும் எந்தத் தொடர்பும் அற்ற அரசியல் ஒழுங்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பல்வேறு குழுக்களும் ஒன்று திரண்டன.
கிராமப் புறங்களில் இருந்தும் அரசுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. றுபாத், கஸப்லங்கா, டேன்ஜயர், மராகே போன்ற பிரதான இடங்களில் இருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. மொரோக்கோ மன்னர் தனது நாட்டு கைத்தொழில் துறையினரோடும் வர்த்தகத் தலைவர்களோடும் ஒரு போதும் தொடர்புகளை துண்டித்தது கிடையாது.
அந்த நாட்டின் பிரபலமான வர்த்தகப் பிரமுகரும் அரச மாளிகை வட்டாரத்துக்கு மிகவும் நெருக்கமானவருமான அஸீஸ் அக்கனோச் என்பவரை மன்னர் பிரதமராகவும் நியமித்தார். கட்சி முறைமையை மாளிகை வட்டாரம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் செயற்பாடு; அதிகரிப்பதை இது கோடிட்டுக் காட்டியது. இதனால் மொரோக்கோவில் ஜனநாயம் தொடர்பான உண்மையான சீர்திருத்தத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாத நிலை ஏற்பட்டது.புதிய அரசு பதவியேற்றது முதல் மௌனமாகவே இருந்தது.
பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களிடம் இருந்து நாளாந்தம் பல்வேறு கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் அரசு அவை எதற்கும் செவி சாய்க்காமல் ஆழ்ந்த மௌனம் காத்தது. அதிகரித்து வந்த நிதி நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி என்பனவற்றில் கவனம் செலுத்த மன்னர் காட்டி வந்த தொடர் தயக்கம் காரணமாக ஊழல் மிக்க வர்த்தக சமூகத்திடமும் அதிகார துஷ்பிரயோகம் மிக்க அரசியல் மேல் மட்டத்திடமும் நாடு சிக்கி விட்டது என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
பொறுப்பற்ற ஒரு நிர்வாகத்தின் தோல்வியை பிரதிபலிப்பதாக இது அமைந்தது. ஆனால் நிர்வாகத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு முறைகேடாக செல்வத்தை குவித்து கிடைக்கின்ற ஆடம்பரங்கள் அனைத்தையும் அனுபவித்து வந்தனர். மறுபுறத்தில் பெரும்பாலான மொரோக்கோ மக்களின் வாழ்வாதாரமும் வருமானமும் பாதிக்கப்பட்டு கொள்வனவு சக்தியும் நிலை குலையத் தொடங்கியது. நாளுக்கு நாள் இந்த நிலை சோமடையத் தொடங்கியது.
அரச தரப்பு இந்த விடயங்களில் கவனம் செலுத்த தேவையற்ற ஒரு தரப்பு போல் நடந்து கொண்டது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. மன்னர் தரப்பு வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் தரப்பாக மாறியது. மொரோக்கோவில் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணத் துறையை ஊக்ககுவித்தல் என்ற போர்வையில் விபசாரம் ஒரு தொழில் துறையாக வளரும் நிலை உருவாக்கப்பட்டது.
இந்த நிலைமைக்கு மேலும் சேர்க்கையாக அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை கையில் எடுத்துள்ள அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான மறைமுகமான யுத்தத்திலும் ஈடுபட்டுள்ளது.
இஸ்லாத்துக்கு எதிரான மொரோக்கோ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. மிகவும் திட்டமிட்ட முறையில் முஸ்லிம் அமைப்புக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவை பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்பைககளுக்கு மொரோக்கொவின் ஆளும் வர்க்கம் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது. உள்நாட்டு விடயங்கள் பற்றி போதிய அறிவற்ற மேற்குலக சக்திகள் இதற்கு தேவையான அங்கிகாரத்தை வழங்கி வருகின்றன.
மொரோக்கோ மன்னர் அமெரிக்க ஐரோப்பிய குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் பூரண தயவிலும் செல்வாக்கின் கீழும் இருக்கின்றார். மாளிகைக்குள் வசிக்கும் அவருக்கு வெளியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் எதுவுமே தெரியாது. முழுக்க முழுக்க மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு பொருத்தமாகவும் அதில் கட்டுண்டவராகவும் அவர் காணப்படுகின்றார்.
மொரோக்கோ தற்போது கொந்தளிக்கும் நிலையில் உள்ள ஒரு எரிமலையாக காணப்படுகின்றது. அதன் தாக்கம் பெரும்பாலும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கும் பரவும் ஆபத்தும் காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM