பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை பெறுபவர் 8 ஆவது ஜனாதிபதி : 7 நாட்களுக்குள் தெரிவு

Published By: Vishnu

15 Jul, 2022 | 12:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது. ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் சபாநாயகர் உட்பட 224 உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் அரைவாசிக்கு மேல் அதாவது 113 வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இரு வேட்பாளர்கள் அல்லது பல வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெறுவார்களாயின் திருவுளச்சீட்டு முறைமை ஊடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுள்ளுமிடத்து தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடடியாக.அத்துடன் வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாதவிடத்து,இரண்டாவது,மூன்றாவது விருப்புத் தெரிவுகள் சரிபார்க்கப்படும்.அதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்புத் தெரிவு எண்ணப்படும்.

வாக்கு எண்ணுகையில் முடிவில் வேட்பாளர் எவரும் செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.அத்துடன் இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாக காணப்படும் பட்சத்தில் திருவுளச்சீட்டு போடப்பட்டு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

அரசியலமைப்பின் 38ஆவது சரத்தின் (1)உப சரத்துக்கு அமைய ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40ஆவது சரத்தில் குறிப்பிட்டுள்ளதற்கமைய பதவி வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவி காலம் முடிவடையாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்குத் தகுதியுள்ள ஒருவர் இடைக்கால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.இத்தெரிவு 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தை பின்பற்றியதாக காணப்படும்.

புதிய ஜனாதிபதி தெரிவு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பங்குப்பற்றலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன்,வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார்.அத்துடன் இந்த நடைமுறைகளுக்காக பாராளுமன்றம் மூன்று நாட்களுக்கு கூடும்.அதன்படி சட்ட விதிகளுக்கு அமைய இரகசிய வாக்ககெடுப்பை நடத்த பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக திகதிக்கு பின்னர் இயன்றளவு விரைவாகம்,எச்சந்தர்ப்பத்திலும் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்கு காலம் தாழ்த்தாமலும் ஜனாதிபதி தெரிவு இடம்பெற வேண்டும்.

அதற்கமைய ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி மூன்று நாட்களாக பாராளுமன்ற அமர்வினை கூட்டுமாறு அழைப்பதற்காக செயற்படுத்தல் வேண்டும் என்பதுடன்,பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கும் திகதியையும்,நேரத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.இதற்கமைய நியமனங்கள் அவரால் பெற்றுக்கொள்ளப்படுவதற்கான திகதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிப்பதுடன்,கூட்டத் திகதியிலிருந்து 48 மணித்திலாயங்களுக்கு முடிந்ததும்,ஏழு நாட்களுக்கும் பிந்தாமலும் ஒரு திகதியாக அது காணப்பட வேண்டும்.

நியனமங்கள் பெற்றுக்கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று பாராளுமன்றம் கூட வேண்டும் என்பதுடன்,பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார்.ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும்,அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்புகிறாரோ,அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கபட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.அவ்வாறு சம்மதத்தைத் தெரிவித்து உறுப்பினர்கள் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும்.

ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு,வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அத்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட் உறுப்பினர்கள் அவ்வாறு முன்மொழியப்பட்டு,வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியும்,நேரமும் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும்,அத்தகைய திகதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக காணப்பட வேண்டும்.

வாக்கெடுப்பை நடத்துவதற்கென நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படுதுடன்,வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்னர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்கு காண்பித்து அவர்கள் முன்னிலையில் இலட்சினையிடல் வேண்டும்.அதற்கமைய வாக்களிப்புத் தொடங்கியவுடன் தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்தல் வேண்டும்.அவ்வாறு அழைக்கப்படும் போது உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அலுவலரின் மேசைக்குச் சென்று வாக்குச்சீட்டொன்றைப் பெற்று தமது வாக்குகளை அடையாளமிட வேண்டும்.அதன் பின்னர் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

உறுப்பினர் ஒருவர் தற்செயலாக வாக்குச்சீட்டொன்றை பழுதாக்கினால்,அதனை அவர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து,தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து,தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய தற்செயல் பற்றித் திருப்தியுள்ளால் அவருக்கு பிறிதொரு வாக்குச்சீட்டைக் கொடுக்கலாம்.பழுதாக்கப்பட்ட வாக்குச்சீட்டை தெரிவத்தாட்சி அலுவலர் உடனடியாக நீக்கி விடுவார்.பெயர் அறிவிக்கப்பட்டபோது வாக்களிக்காதிருந்த எவரேனும் உறுப்பினரின் பெயர் இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும்.அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியவராக கருதப்படுவார்.

ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உரித்துடையதாக இருக்கும் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் '1'எனும் எண்ணை இடுதல் வேண்டும்.பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்புத் தெரிவினை வழங்க முடியும்.இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் '2,3' எனும் விருப்புத் தெரிவுகளை வழங்க முடியும்.இவ்வாறு வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும்.எவரேனும் வேட்பாளர் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் சமுகமளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு கிடைக்கும் அல்லது அவரது பிரதிநிதியாக சமுகமளிப்பதற்கு வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுள்ளவிடத்து தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.அத்துடன் வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாதவிடத்து,இரண்டாவது,மூன்றாவது விருப்புத் தெரிவுகள் சரிபார்க்கப்படும்.அதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்புத் தெரிவு எண்ணப்படும்.

வாக்கு எண்ணுகையில் முடிவில் வேட்பாளர் எவரும் செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.அத்துடன் இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாக காணப்படும் பட்சத்தில் திருவுளச்சீட்டு போடப்பட்டு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22