சிசேரியன் சத்திரசிகிச்சை அறையில் கர்ப்பிணி மீது வல்லுறவு : வைத்தியர் கைது

Published By: Vishnu

14 Jul, 2022 | 02:45 PM
image

சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்சை அறையில் கர்ப்­பிணி பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் வைத்­தியர் ஒரு­வரை பிரேஸில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

றியோ டி ஜெனெய்ரோ நக­ரி­லுள்ள 'டா முல்ஹெர்' வைத்­தி­ய­சா­லையில் இப்­பா­லியல் வல்­லு­றவுச் சம்­பவம் இடம்­பெற்­ற­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

32 வய­தான ஜியோ­வனி குய்ன்­டெல்லா பெஸேரா எனும் மருத்­து­வரே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்­சைக்­கான மயக்­க­ம­ருந்தை செலுத்­திய பின்னர், இப்­பெண்ணை வைத்­தியர் பெஸேரா வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இப்­பெண்ணை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வதை மேற்­படி வைத்­தியர் வீடி­யோ­விலும் பதிவு செய்­து­கொண்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இப்­பெண்ணின் கண­வரை சத்­தி­ர­சி­கிச்சை அறை­யி­லி­ருந்து வெளி­யேற்­றி­விட்டு இக்­குற்­றச்­செ­யலில் மேற்­படி வைத்­தியர் ஈடு­பட்­டுள்ளார். 

குறித்த வைத்­தி­யரை பொலிஸார் கைது செய்­தபின், அவ்­வைத்­தியர் தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­பட்­ட­போது, அவரை பெண்ணின் கணவர் அடை­யாளம் கண்டார்.

இதே­வேளை குறித்த தினத்தில் மேலும் இரு கர்ப்­பி­ணிகள் மீதும் மேற்­படி வைத்­தியர் பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்ளை நடத்­தி­யுள்ளார் என முறபை;பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

கர்ப்­பி­ணி­க­ளுக்கு அதி­க­ள­வான மயக்­க­ம­ருந்தை மேற்­படி மருத்­துவர் வழங்­கு­வது குறித்து வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் கவலையடைந்திருந்தனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவத்தை இதற்குமுன்  நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right