யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான 19 வயதின் கீழ் கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இப் போட்டிக்கு முன்பதாக பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியை வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி சந்திக்கவுள்ளது.
கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் 2014 இல் ஆரம்பமானது முதல் ஸாஹிரா அணி விளையாடும் மூன்றாவது தொடர்ச்சியான இறுதிப் போட்டி இதுவாகும்.
2014 இல் சம்பியனான ஸாஹிரா, கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இம்முறை மீண்டும் சம்பியனாவதற்கு பலம்வாய்ந்த அணியாக ஸாஹிரா தென்படுகின்றது.
மறுபுறத்தில் இப் போட்டிகளில் முதல் தடவையாக விளையாடும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதல் சந்தர்ப்பத்திலேயே சம்பியனாகும் நோக்கத்துடன் நாளை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்கொள்ளவுள்ளது.
எனினும் புனித பத்திரிசியார் அணி, அரை இறுதியிலும் பார்க்க சிறந்த வியூகங்களுடன் விளையாடினாலன்றி பலம் வாய்ந்த ஸாஹிராவை வெற்றிகொள்வது என்பது சுலபமல்ல.
எனவே, நாளைய போட்டி இரு அணி வீரர்களுக்கும் மிக முக்கிய போட்டியாக கருதுப்படுவதால் வெற்றி யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM