(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் உடன் அமுலாகும் இன்று புதன்கிழமை நண்பகல் முதல் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு , மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லாத நிலையில், பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாறு அவசரகால சட்டத்தையும், ஊரடங்கு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தரப்பினரை உடனடியாக கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை தமது பொறுப்பிலெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புபடையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய ஊரடங்கு நடைமுறையிலுள்ள இந்தக் காலப்பகுதியில் அனைவரையும் அவரவர் வீடுகளிலேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவல வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு, அவற்றிலுள்ள பெருமளவான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினமும் பிரதமர் அலுவல வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதற்கமைய பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுவதை தவிர்த்தல், வன்முறைகள் ஏற்படாமல் தவிர்த்தல் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறு அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM