(ஏ.என்.ஐ)
ஜீ-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது இருதரப்பு உறவுகள் உட்பட பரந்துப்பட்ட திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இந்த ஆண்டு, ஜீ-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தோனேஷியா ஏற்பாடு செய்துள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஜீ-20 இல் அடங்குகின்றன.
மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் செனகல் வெளியுறவு அமைச்சர் அய்சாதா டால் சால் ஆகியோரையும் சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எஃப்எம் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் உறவுகளில் மாற்றம் ஏற்பட்டதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது. நமது தலைவர்களின் சமீபத்திய சந்திப்பு அதிக வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை அளித்துள்ளது. சமகால பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் அவரது நுண்ணறிவுகளை பாராட்டுகிறேன்' என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM