(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை இராணுவம் மறுத்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தி இராணு ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறும் சில காணொளிகள் பரவி வருவது இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்ப்பாட்டகாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை இராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் மற்றும் வான் நோக்கி துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர்.
வான் மற்றும் பக்கச்சுவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதால், பணியில் இருந்த அந்த இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டகாளர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று அர்த்தப்படமாட்டாது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM