(எம்.மனோசித்ரா)
உலக உணவு திட்டத்தின் பிரதானியின் விஜயம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள தீர்க்கமான கலந்துரையாடல்கள் என்பவற்றுக்கு நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுவது அத்தியாவசியமானதாகும்.
அவ்வாறன்றி அரசாங்கமொன்றின் நிர்வாகம் இன்றி நாட்டைக் கொண்டு செல்வது தவறாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கட்சி தலைவர் கூட்டத்தின் பின்னர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
நான் ஜனாதிபதியிடம் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தேன். இன்று நாட்டில் எரிபொருள், உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக உலக உணவு திட்டத்தின் பிரதானி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பல தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த அரசாங்கம் பதவி விலகிய உடனேயே பிறிதொரு அரசாங்கமும் அமைக்கப்பட வேண்டும்.
அரசாங்கமொன்றின் நிர்வாகம் இல்லாமல் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாட்டைக் கொண்டு செல்வது தவறாகும்.
எனவே இந்த அரசாங்கம் பதவி விலகும் போது புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுத்துகின்றேன்.' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM