(எம்.மனோசித்ரா)
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி , தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் , அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மெய்ந்நிகர் ஊடாகவும் , மனோ கணேஷன் , ரவுப் ஹக்கீம், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ, சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே பதவி விலக வேண்டும் என்று பெரும்பாலானோரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும், சபாநாயகர் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் , ஜனாதிபதியொருவரை பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் மற்றும் அதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அது வரையில் பாராளுமன்றம் தெரிவு செய்பவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்ற தீர்மானங்களே கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM