(எம்.மனோசித்ரா)
சபாநாயகர் இல்லத்தில் இடம்பெற்றுவரும் கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் பதவி விலக வேண்டும் என்றும் , அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , '' சபாநாயகரின் இல்லத்தில் அவசர கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்று வருகிறது. பிரதமர் , அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மெய்ந்நிகர் ஊடாக கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் பதவி விலகுமாறு கோருவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்.
கட்சித் தலைவர்கள் உடனடியாக அனைத்து கட்சி அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது எனவே இதற்கான பல மாற்று வழிகள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றன.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM