(எம்.மனோசித்ரா)
நாட்டு நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல பிரதேசங்களிலிருந்தும் தலைநகர் கொழும்பில் ஒன்று திரண்ட பொது மக்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைத்து அதனை ஆக்கிரமித்துள்ளனர்.
இதே வேளை ஆர்ப்பாட்டத்தினால் இதுவரையில் 33 பேர் காயமடைந்துள்ளதோடு , அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிமடாக உள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஆர்ப்பாட்ட நிலைமை தீவிரமடைந்து வருகின்ற நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM