கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இருந்து ஒன்று கூடிய மக்கள் காலிமுகத்திடலில் பெரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடக்க பொலிஸார் அவ்வப்போது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீரப்புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டதில் ஈடுபட்டுள்ள மக்களும் பொலிஸாரின் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM