(நா.தனுஜா)
கொழும்பில் நாளை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளின்றி அமைதியான முறையில் இடம்பெறுவது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், அப்போராட்டங்களைத் தடுப்பதிலிருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புத்தரப்பினரை வலியுறுத்தியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்குக் காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று மாதகாலமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களிலும், அதனைத்தொடர்ந்தும் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததுடன் உயிரிழப்புக்களும் பதிவாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறுகோரி இன்றைய தினம் நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் வன்முறைகளிலிருந்து விலகியிருப்பதன் அவசியம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அவற்றைத் தடுப்பதிலிருந்து விலகியிருக்கும் அதேவேளை, வன்முறைகளைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும் மருத்துவ மற்றும் ஏனைய மனிதாபிமான அத்தியாவசியசேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவேண்டாம் என்று போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களிடமும் ஆதரவாளர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் போராட்டங்களைக் கண்காணிக்கின்ற மற்றும் அறிக்கையிடுகின்ற உரிமை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றது என்பது குறித்தும், அவ்வுரிமை எவ்வித இடையூறுகளுமின்றி பாதுகாக்கப்படவேண்டும் என்பது குறித்தும் பாதுகாப்புத்தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM