ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ்பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு தடையேற்படுத்தப்போவதில்லை என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நாளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்படுவதை அவதானித்துள்ளோம், என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இன்றும் நாளையும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிற்காக கொழும்பிற்கு வருவார்கள் என புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதில் பொலிஸாருக்கு பிரச்சினை எதுவுமில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் எனினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிகுந்தவையாக மாறினால் பொலிஸார் சட்டகட்டமைப்பிற்குள் நடவடிக்கை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM