(ரொபட் அன்டனி)
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியுமான பரனோஸ் ஏன்லி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராயவுள்ள பிரிட்டன் அமைச்சர் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் கொழும்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள பிரிட்டன் அமைச்சர் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பலப்படுத்துவது குறித்தும் இலங்கை விஜயத்தின்போது அவர் வலியுறுத்தவுள்ளதுடன் நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராயவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM