வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் தாயும் ஆண்குழந்தையும் சடலங்களாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளம் தாயும் அவரது இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுமே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமான மீட்கப்பட்டுள்ளனர்.
புதிய வேலர்சின்னக்குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயாகிய நாகநாதன் சுகந்தினியும் அவருடைய இரண்டரை வயதுடைய இரண்டாவது மகனாகிய நாகநாதன் கிந்துஜன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கிராம மட்டத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும் நுண்நிதி நிறுவனமொன்றில் கடனை பெற்ற குறித்த பெண் கணவருடன் நேற்றையதினம் முரண்பாட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இரண்டரை வயதுடைய தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். இதன்போது தனது 5 வயது மகனையும் அழைத்தபோதிலும அவன் தனது தந்தையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளான்.
இந்நிலையில் குறித்த இருவரும் இரவாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் அயலவர்களின் உதவியுடன் கணவனும் இணைந்து தேடியுள்ளார்.
இந்நிலையில் பன்றிகெய்தகுளம் கிராமத்தின் பின்புறமாக பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட கிணற்றில் இருந்து இருவரது சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை சம்பவ இடத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் சென்று உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM