உக்ரைன் மோதலில் இந்தியா 'சரியான போக்கை' எடுத்துள்ளது என்றும் விரோதங்கள் ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தும் அளவிற்கு அதிகரிக்காமல் தடுப்பதே மிக முக்கியமானது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'மோடி@20: 'ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெப்ரவரியில் உக்ரைனில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து இந்தியா 'சரியான போக்கை' கையாண்டது. 'மிக அவசரமான பிரச்சினை, விரோதம் தீமை மட்டுமே செய்யும் அளவிற்கு அதிகரிப்பதைத் தடுப்பதே நோக்கமாகியது என்றார்.
உக்ரைன் சம்பவத்தை மகாபாரதத்தின் சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் கூறினார். போரைத் தடுக்க இந்தியா அனைத்தையும் செய்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைன் நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்ட எரிபொருள், உணவு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட நிலைமையை இந்தியா சமாளித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்
பிரதமர் மோடி ஒரு தேசியத் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கான டெம்ப்ளேட்,' என்று அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM