(நா.தனுஜா)
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிவாயுவை அதிக விலைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இடமளித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இம்மோசடிக்கு எதிராக வெகுவிரைவில் கோப்குழுவின் ஊடாக உரிய சட்டநடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் (06) புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
அதிக விலைக்கு எரிவாயு இறக்குமதி இடம்பெறுவது குறித்த தகவல்களை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத்திடம் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்திருந்தோம்.
அதன்படி பாராளுமன்றத்தில் கோப்குழு கூடியது. இருப்பினும் அதன் விசாரணைகள் எமக்கு மிகுந்த வேடிக்கையாகவே இருந்தது.
பொருட்களைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும், அதிக விலைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இடமளிப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகும்.
கடந்த தடவை இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியைப்போன்று இம்முறை எரிவாயு மோசடி இடம்பெறுவதற்கு எம்மால் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.
எனவே எரிவாயு இறக்குமதியுடன் தொடர்புபட்டதாக லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விலைமனுக்கோரல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைகள் என்பன குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டு அறிக்கை இன்னும் இருவாரங்களில் சமர்ப்பிக்கப்படும்.
அதனடிப்படையில் கோப்குழுவின் ஊடாக மேற்கொள்ளத்தக்க சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM