வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்கும் வீதியை மறித்த  இராணுவம் ! - மீண்டும் ஒரு பாதையை மறித்ததால் குழப்பம் 

Published By: Digital Desk 4

05 Jul, 2022 | 08:19 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க  வட்டுவாகல்  சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை ஐந்து முப்பது மணியளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி அடியார்கள் சென்றுபோது ஆலயத்திற்கு தீர்த்தம் எடுப்பதற்கு செல்கின்ற தீர்த்தக்கரை செல்லும்  வீதியை மறித்து  591 ஆவது படைப்பிரிவின் 12 S L  L I படைப்பிரிவு  இராணுவத்தினர் தீர்த்தம் எடுப்பதை தடை செய்துள்ளனர்.

குறித்த வீதி ஊடாக இராணுவத்தினர் தீர்த்தம் எடுக்க செல்ல விடாததன் காரணமாக குறித்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. ஒன்பது முப்பது மணி வரை அவர்கள் தீர்த்தம்  எடுக்க சம்மதிக்காத நிலையில் அந்த இடத்தில் ஒன்றுகூடி இருந்த  மக்கள் முல்லைதீவு பரந்தன் பிரதான வீதியில் வட்டுவாகல்  பாலத்திற்கு அருகாமையில் வட்டுவாகல்  சப்த கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரித்து வீதி தடை ஏற்படுத்தியிருந்த இடத்திற்கு சென்று இராணுவத்தினரை ஆலய கடமைகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் ஆலய காணியில் இருந்து வெளியேறுமாறு மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் வீதிக்கிறாங்கி  போராட முற்பட்ட வேளையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆயுதம் தாங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் சில மணி நேரமாக பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் தங்களுடைய ஆலய கடமைக்கு ஒத்துழைக்காத இராணுவம் ஆலய  காணியில் இருந்து  வெளியேற வேண்டும் என்ற மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து குறித்த பகுதியில் இருந்த ஆலய  காணியில் இருந்து இராணுவத்தினர் தங்களுடைய பொருட்களை அகற்றி குறித்த இடத்திலிருந்து வெளியேறுவதாக  உறுதி அளித்து வெளியேறினர் 

குறித்த இடம் இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில்   உடனடியாகவே மக்கள் குறித்த இடத்தினை  எல்லை படுத்தி அதனை வேலியடைதந்திருந்தனர் அத்தோடு  குறித்த காணி சப்த கன்னிமார் ஆலயத்துக்குரிய காணி என  பெயர்  பலகை ஒன்றையும் நாட்டியுள்ளனர்

இதன் பின்னணியில் குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு  மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி  உள்ளிட்ட பலர் வருகைதந்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வேலி அடைக்கும் பணிகளை நிறுத்த கோரினர் மக்கள் தங்களுடைய காணி என்பதை தெரிவித்து தாங்கள் வேலி அடைப்போம் என்பதையும் ஆலய தீர்த்தம் எடுக்க விடமுடியாத இராணுவத்தினரை எமது ஆலய காணியில் இருக்க விடமாட்டோம் என உறுதியாக தெரிவித்து தமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சம்பவங்களில் பின்னணியில் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வட்டுவாகல்  பகுதியிலுள்ள நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியில் இராணுவத்தினர் அமைத்திருக்கின்ற இராணுவ முகாமில் இந்த திருவிழாவினுடைய இறுதி நாளில் பரியழம்  வழி விடுகின்ற ஒரு சம்பிரதாய நிகழ்வு நடாத்துகின்ற ஒரு பகுதியும் இந்த இராணுவ முகாமிற்குள் உள்வாங்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் பாரியதொரு பௌத்த விகாரையும் அந்த பகுதியில் அமைத்திருக்கின்றார்கள் அந்த  விகாரை அமைந்திருக்கின்ற அந்த வளாகத்தில் இவர்களுடைய அந்த பரியழம்  வழி விடுகின்ற இடம் இருக்கின்ற காரணத்தினால் இராணுவத்தினருடன் மக்கள் கலந்துரையாடி ஆலய நிதியிலிருந்து ஒரு தொகை நிதியை கொடுத்து அந்த பரியழம்  வழி விடுகின்ற இடத்திற்கு சென்று வருவதற்காக அங்கு தூண்கள் நாட்டப்பட்டு கதவு போடப்பட்டு அதற்கான சாவி ஆலய நிர்வாகத்திடம் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவங்களின் பின்னணியில் இன்று அதிகாலை அந்த இடத்தில் மக்கள் சென்ற போது அந்த இடத்தில் போடப்பட்டு இருந்த தூண்கள் கதவு  முற்று முழுதாக இடித்து அகற்றப்பட்டு தூண்கள் போடப்பட்டு முள்ளு கம்பி இழுத்து வேலி அடைக்கப்பட்டுள்ளது இதனால் இந்த திருவிழாவினுடைய இறுதி நாளான எதிர்வரும் திங்கட்கிழமை அந்த நிகழ்வினை செய்ய முடியாத அளவிற்கு இராணுவம் மீண்டும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த தீர்த்தக்கரை வீதி மற்றும் நந்திக்கடல் கரை  இந்த பரியழம்  வழி விடுகின்ற இடம் போன்றவை இந்த 591 ஆவது படைப்பிரிவின் 12 S L  L I படைப்பிரிவு இராணுவ முகாமுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றதால் இந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் 

மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல முடியாத அளவு களப்பு வரை வேலி  அமைத்திருக்கின்றார்கள் குறிப்பாக வீதியை மூடி தொழிலாளர்கள் கடத்தொழில் ஈடுபட  முடியாத துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் ஆலய சம்பிரதாய நிகழ்வுக்கு தடைவிதித்து அந்த பகுதியில் பாரிய புத்த விகாரையை அமைத்திருக்கின்றார்கள் இவை அனைத்தையும் மக்கள் பலகாலமாக அகற்றுவதற்கு கோருகின்ற போதும் எந்த விதத்திலும்  முன்னேற்றமான நிகழ்வுகள் இடம் பெறாத நிலை  காணப்படுகின்றது குறிப்பாக இந்த வீதி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு இரண்டு தடவைகள் அவர்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்த்த போதும் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை

இவ்வாறான பின்னணியில் இராணுவத்தினர் ஏட்டிக்கு போட்டியாக மக்களுக்கு இவ்வாறு ஆலய செயற்பாடுகளுக்கு தடை போடுவது தமது மத வழிபாட்டு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு எனவும் இதற்கு எதிராக பாரியளவில் போராட எதிர்பார்ப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக இன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்க உள்ளதாகவும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள்  மாவட்ட அரசாங்க அதிபரால் தங்களுடைய வீதி மற்றும் தங்களுடைய ஆலய கடமைகளுக்குரிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படாவிட்டால் வட்டுவாகல்  பாலத்தில் பிரதான வீதியை மறித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்  பீற்றர்  இளஞ்செழியன் ஆகியோர் மீது இராணுவத்தினர் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்ற நிலைமையில் இன்று ஆலய தலைவரிடமும் பீற்றர்  இளஞ்செழியனிடமும்  முல்லைத்தீவு பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

இந்த விசாரணைகளில் இராணுவத்தினர் தங்களுடைய அந்த வீதி தடை ஏற்படுத்துகின்ற அந்த பாதுகாப்பு கடமைகளுக்காக ஆலய காணியை ஆலய  நிர்வாகத்தினுடைய சம்மதத்தோடு பெற்று தருமாறு கோரியதாக தெரிவித்ததாகவும் அதனை வழங்க முடியாது  என பொலிசருக்கு உறுதியாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

ஆலய சம்பிரதாய கடமைகளில் இராணுவத்தின் இவ்வாறான தலையீடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு இந்த ஆலய தீர்த்தம் எடுக்கின்ற வீதி மற்றும் பரியழம்  வழி விடுகின்ற கடமைகளுக்குரிய இடங்களில் இருந்து இராணுவத்தினர் முற்று முழுதாக வெளியேற வேண்டும் எனவும் குறிப்பாக இந்த ஆலயத்தினுடைய தீர்த்த வீதி தற்போது 12 S L  L I இராணுவ முகாம் வீதி என பெயர் மாற்றப்பட்டு பெயர்ப்பலகை போடப்பட்டுள்ளது  இதற்கு எதிராக பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33