(எம்.வை.எம்.சியாம்)
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் தற்போது சுகாதார வழிமுறைகள் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவலடையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நான்காவது தடுப்பூசியை முறையாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் முடங்கியிருந்தன. இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தியிருந்தது.
இதற்கு முதன்மை காரணம் கொவிட் தொற்று தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு முறையாக பெற்றுக்கொடுத்த மையாகும். அதன் காரணமாக நாம் அதில் இருந்து மீள முடிந்தது.
இந்நிலையில், தற்போது பல நாடுகளில் கோவிட் தொற்று பரவும் அபாயம் தோற்றம் பெற்று இருக்கிறது. குறித்த நாடுகள் கொவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் மீளவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொடர்பான அவதானம் செலுத்த வேண்டும்.
இதற்கமைவாக, முறையாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் 4 வது தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவும். மேலும் கொவிட் தடுப்பூசியின் முதல் இரு மாத்திரைகளை பெற்றுககொள்ளதவர்களும மற்றும் 3 வது மாத்திரையையும் முறையாக பெற்றுக்கொள்ளுங்கள்.
அதற்கமைவாக கொவிட் தடுப்புக்கான 4 வது கொவிட் தடுப்பூசியை அருகில் உள்ள வைத்தியசாலைகள், தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பில் குறித்த சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அங்கு சென்று உரிய நேரத்தில் அதை பெற்று கொள்ளுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM