காலி - தங்கெதர பகுதியில் சிறுநீரகத்தை விற்ற பணத்தில் ஹெரொயின் போதைப்பொருள் வாங்கிய நபரொருவரை காலி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் காலி தெவட்ட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பதுடன், இவர் ஹெரொயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவரென்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு ஹெரொயின் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு வருமானம் இருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவருக்கு தெரிந்த நபரொருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். குறித்த வீட்டில் உள்ள நபர் சிறுநீரக நோயாளி, அவருக்கு அவசரமாக சிறுநீரகமொன்று தேவைப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் 5 இலட்சம் ரூபாவுக்கு தனது சிறுநீரகத்தை தர குறித்த நபரிடம் இணங்கியுள்ளார்.
இந்நிலையில் கொழும்புக்கு வந்த சந்தேக நபர் தனது சிறுநீரகத்தை கொடுத்துள்ளதுடன், நோயாளியிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார்.
குறித்த பணத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கு ஹெரொயின் போதைப்பொருள் வாங்கியுள்ளதுடன், மீதமுள்ள பணத்தினையும் செலவளித்துவிட்டு காலிக்கு திரும்பியுள்ளார்.
இதன் போதே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பாட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM