(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரிலேயே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக்க கொண்டு தற்போதிலிருந்தே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (05)செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த பெரும்போகத்தில் சுமார் 40 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் வரை 375 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சந்தைகளில் அரிசியின் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரிசி மற்றும் நெல் என்பவை பதுக்கப்படுகின்றமையின் காரணமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் சிறுபோகத்திற்கு 275 000 ஹெக்டயரில் விளைச்சலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும் , உலக உணவு தட்டுப்பாடு , உள்நாட்டில் உணவு தட்டுப்பாடு என்பவை தொடர்பில் முன்னறிவிக்கப்பட்டமையினாலும் , உரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தமையினாலும் சுமார் 400 000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களிலேயே அரிசி குறைவடையக் கூடும் என்று மதிப்பிப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக்க கொண்டு தற்போதிலிருந்தே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை வர்த்தகத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM