(க.கிஷாந்தன்)
உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் புதிய செயற்திட்டம் நுவரெலியா பிரதேச சபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையை ஆரம்பித்து வைக்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு இன்றைய தினம் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர் யூ.எச்.பத்மா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இந்நடைமுறை குறித்தும் அதனால் சுற்றாடலுக்கும், மக்களுக்கும் ஏற்படவுள்ள அனுகூலங்கள் தொடர்பிலும் பிரதேச மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தியதோடு, இதற்கு அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நுவரெலியா பிரதேச சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதேச சுகாதார பரிசோதர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், நுவரெலியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM