(எம்.வை.எம்.சியாம்)
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 19 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் வெளியேற முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
19 கோடி பெறுமதியான எட்டரை கிலோ கிராம் நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் அமெரிக்க டாலர்கள் 75,000 மற்றும் யூரோ 18,000 என்பவற்றை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்பட்ட நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு முனையத்தில் தங்கியிருந்த வர்த்தகர்கள் மற்றும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் வெளியேற முயற்சித்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்தும் புதுடெல்லி இருந்து வந்த இந்தியன் விமானம் மூலம் இந்த நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 53 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் எனவும் இருவரும் இரு நாட்டு விமான நிலையங்கள் ஊடாக தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி வருவதாகவும் 46 வயதுடைய மற்றைய நபர் தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அடிக்கடி வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூவர் கைது
Published By: Digital Desk 3
04 Jul, 2022 | 02:35 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM