நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காலியில் நிலப்பரப்புக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தெஹிவளை, காலி, அம்பலாங்கொடை கடற்பிரதேசங்களில் கடல் கொத்தளிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இன்று (02) மாலை கடல் அலைகள் கரையை நோக்கி வந்ததால் காலி துறைமுக பொலிஸ் சுங்கம் உள்ளிட்ட பல இடங்களுக்குள் கடல் நீர்புகுந்துள்ளது.
கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீனவப் படகுகளும் அலைகளினால் நிலப்பகுதியை நோக்கி இழுத்து வரப்பட்டுள்ளன.
அத்துடன் காலி -மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதுடன், நிலவும் பலத்த காற்றுடன் கடல் அலைகள் கரையை நோக்கி பாய்ந்துள்ளன.
இதையடுத்து கொழும்பு முதல் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பரப்பை எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு பயன்படுத்த வேண்டாமென அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM