(இராஜதுரை ஹஷான்)
லங்கா ஐ,ஓ.நி நிறுவனத்திற்கு சொந்தமான 90,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் பெற்றோல் அடங்கிய மூன்று கப்பல்கள் இம்மாதம் நாட்டை வந்தடையவுள்ளன.
ஐ.ஓ.சி. நிறுவனம் வசமுள்ள எரிபொருள் ஒருமாத காலத்திற்கு போதுமானதாக அமையும் என ஐ.ஓ,சி. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நாளாந்தம் தீவிரமடைந்து வரும் பின்னணியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 90 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
நாடுதழுவிய ரீதியில் உள்ள ஐ.ஓ,சி.நிறுவனத்திற்கு சொந்தமான 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் நேற்று முன்தினம் விநியோகிக்கபபட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள எரிபொருள் ஒருமாத காலத்திற்கு போதுமானதாக உள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 3 கப்பல்களில் 90,000 மெற்றிக்தொன் பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அதற்கமைய முதலாவது கப்பல் எதிர்வரும் 13 அல்லது 14ஆம் திகதியும், இரண்டாவது கப்பல் 29அல்லது 31ஆம் திகதியும் நாட்டை வந்தடையவுள்ளதுடன், மூன்றாவது கப்பல் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி நாட்டை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM