(ரொபட் அன்டனி)
வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுக்கு எட்டியவகையில் ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஊக்குவிப்புடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது. ஆனால் அரசாங்கம் இந்த ஆவா குழுவை முழுமையாக அடக்கியே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் சட்டம் அதனை செய்யும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தவகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM