(எம்.ஆர்.எம்.வசீம்)
மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றிருந்த வேளை, சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதி பத்திரம் வழங்கவில்லை என குறிப்பிட்டு அவரை தடுத்துவைத்து சித்திரவதை செய்தமை தொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அவர் அனுப்பி இருக்கும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாத்தறை பிரதேச செயலாளர் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றிருந்த வேளை, சுகாதார ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருள் அனுமதி பத்திரம் வழங்கவி்லலை என தெரிவித்து அவரை தடுத்துவைத்து, சித்திரவதை செய்திருப்பதாக, அரச அதிகாரிகள் பலரிடம் இருந்து எனக்கு முறைப்பாடு வந்திருப்பதுடன் ஊடகங்கள் ஊடாகவும் இந்த சம்பவம் அறிக்கை இடப்பட்டு, பாரியதொரு பிரசாரத்தை வழங்கி இருக்கின்றது.
குறிப்பாக அரச வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறான அநாகரிகமான, மிலேச்சத்தனமாக நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பில் காரணம் சொல்வதற்கு இயலாது.
நோயாளர்களின் நலனுக்காக முடியுமானளவு செயற்படுவதாக உறுதிப்பிரமாணம் வழங்கி இருக்கும் வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாகிகள் இதுதொடர்பில் பொறுப்புக்கூறவேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு, இதனுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.
அத்துடன் விசாரணை அறிக்கையின் பிரதியை சட்டமா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM