இலங்கையில் இருந்து மேலும் 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த டோமினிக் (42), அவரது மனைவி சுதர்சனி(24) அவரது ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50) உள்ளிட்ட 4 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 05.00 மணி அளவில் தனுஸ்கோடியை அடுத்த நான்காம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
மணல் திட்டில் சுமார் 4 மணிநேரமாக சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் படகில் சென்று அவர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 96 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM