ராஜகிரிய ஒபேசேகர பகுதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக ஒபேசேகரபுர பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் எரிபொருளை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே எரிபொருள் பவுசருக்காக மக்கள் தங்கள் வாகனங்களுக்குள் காத்திருக்கும் போது கார் உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருள்கள் திருடப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் எரிபொருள் இணைப்புகளை வெட்டி ஒரு திட்டமிடப்பட்ட கும்பல்கள் திருடி வந்துள்ளன.
இவ்வாறு திருட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM